Search

Tuesday, 29 June 2010

சூபி இசையும், பக்கிர் ஷாஹிபுகளின் பாட்டும்

சூபி இசை உலகின் பல்வேறு நாடுகளில் அந்தந்த நாடுகளின் மரபிசையுடன் கலந்து அதன் வடிவம் குன்றாமல் இருக்கும் இசை வடிவமாகும். ஈரான்,சிரியா,செனெகல்,துருக்கி,பெர்சியன் போன்ற நாடுகளிலிருந்து வந்த இந்த இசை வடிவத்தின் மற்றொரு உருவே நமது பக்கிர் ஷாஹிபுகள் அவர்களே புனைந்து பாடும் பாட்டுக்கள். Hamza El Din மற்றும் ஆப்ரிக்காவை சார்ந்த Ismael Lo ஆகியோரின் படைப்புகள் நமது பக்கிர் ஷாஹிபுகளின் பாட்டு வடிவம் போன்று அவர்களே புனைந்து பாடுவதாகும்.

கீழ்கண்ட இசையை கேட்டு பாருங்கள், இது செனகல் இன் சூபி இசை வடிவமாகும். இது நமது பக்கிர் ஷாஹிபுகளின் பாட்டு மாதிரியாக இருக்கக் காணலாம்.





சூபியிசையின் மற்றொரு வடிவம் திக்ர் ஆகும்.மன அமைதியை ஏற்படுத்தும் ஒத்திசைவு திக்ர்,இதனை call of sufi என்ற இசை ஆல்பத்திலிருந்தும்,துருக்கியை சார்ந்த Omar Faruk Tekbilek அவர்களின் எல்லா இசை ஆல்பங்களிலும் நீங்கள் கேட்கலாம்.
கீழ் கண்ட ஒத்திசைவு திக்ர் செனெகல் இன் திக்ர் மஜ்லிஸில் இருந்து....






சூபியிசையிலே மற்றொரு வடிவமாக புர்தா மற்றும் மவ்லித் பாடல்களும் வருகிறது...
ஹம்மாமி முன்ஷிதின் புர்தா (மவ்லாய சல்லி வசல்) பாடல்...






இங்கே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக நாகூர்,கோட்டைப்பட்டினம்,பொட்டல்புதூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த பெரும் பக்கிர்ஷாகிபுகள் அவர்களின் காலத்தோடு அதை எடுத்துச் செல்ல இயலாமல் போனதால் இன்று பக்கிர் ஷாகிபுகளின் பாடல்களே அரிதாகிவிட்டது.ஆனால் நமதூரில் இன்றும் மேளப்பள்ளிவாசல் கந்தூரியில் பத்தாம் நாள் கொடியிரங்கும்போதும், நோன்புக் காலங்களில் சஹர் நேரங்களிலும் பக்கிர்ஷாஹிபுகளின் வருகையை பார்க்கலாம் என்றாலும் அதுவும் குறைந்து கொண்டு வருகிறது.
தற்போது அங்கொன்றும்,இங்கொன்றுமாக வாழும் பக்கிர் ஷாஹிபுகளில் அதிக கவனம் பெறுபவர்கள் நாகூரை சார்ந்த மூவர் எம்.அப்துல் கனி,எம்.ஹாஜ மைதீன்,எஸ்.சபூர் மைதீன் பாபா ஆகியோர் ஆவர். இவர்கள் நிறைய வெளிநாட்டு கச்சேரிகளிலும், western,Jazz,Sufi,Folk,Buddist Saint Music ஆகிய இசை வடிவங்கள் கலந்து நடைபெற்ற EarthSync Music Festival 2008 லும் கலந்து கொண்டு பாடியுள்ளனர்.குறிப்பாக A.R.ரஹ்மான் இசையமைத்து,கௌதம் மேனன் இயக்கிய உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாடலின் வீடியோ தொகுப்பில் இம்மூவரும் இடம்பெற்றுள்ளனர்.நாகூர் session என்ற வீடியோ தொகுப்பிலும் மிகச்சிறப்பாக பாடியுள்ளனர்.

குறிப்பாக...

யா ஹாஜா...யா ஹாஜா...
அஜ்மீரினில் வாழும் ராஜா.....
எம்மை கண் பாரய்யா....

என்ற பாடலை ஒரு வாரமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.அதுவும் அந்த வீடியோவில் நடுவில் உள்ளவரான எம்.ஹாஜா மைதீனின் குரல் அற்புதம்.உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.கேட்டுப் பார்க்கவும்.

தொடர்புடைய
















No comments:

Post a Comment